காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்! யாழில் போராட்டம்!

இன்று சர்வதேச காணாமல் போனோர் தினம்.

இந்நாளில் யாழ். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று பேரூந்து நிலையத்திற்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் போனவர்களைக் கண்டறிய பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.