கர்ப்பிணி தாய்மார்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.20,000 உதவித்தொகையுடன் கூடுதலாக ரூ.2,500 வழங்கப்படும்.

நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இடைக்கால உரையில் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, தெரிவு செய்யப்பட்ட 61,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.

இந்த கொடுப்பனவு 4 மாதங்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.