தொழில் இல்லாதவர்களுக்கு 20 ஏக்கர் காணி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதாகவும், அதற்காக 50 மில்லியன் ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியினால் வேலையிழந்தவர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.