யாழில் மீட்கப்பட்ட வயோதிபரின் சடலம் !

இன்று செவ்வாய்க்கிழமை (30) நண்பகல் நெல்லியடி பழைய சந்தையின் பின்புறத்தில் இருந்து வியோதிபாரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் அல்வாய் மேற்கு உப்புலுகினதடியைச் சேர்ந்த கந்தவனம் அரம்ராசா (வயது-75) என்பவராவார்.

இந்த மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வி.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சடலம் பருத்தித்துறை ஆராய்ச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.