மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

மட்டக்களப்பு சந்திவெளியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிவல பிரதான வீதியில் இன்று பிற்பகல் 3:45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இதில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த தாயும் 03 வயது குழந்தையும் சந்திவெளி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கோரக்கல்லிமடு, கிரான் முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஜீவரெத்தினம் சனுஜன் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சந்திவெளி சந்தை வீதியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை சந்திவெல பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.