ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த 24 வயதான தாய்! ஒரு ஆண் குழந்தை, 3 பெண் குழந்தைகள்..!

புத்தனம் வைத்தியசாலையில் 24 வயதான இளம் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

24 வயதுடைய இளம் தாய் ஒருவரே இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் என புத்தளம் வைத்தியசாலை பணிப்பாளர் சுமித் அன்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஒரு ஆணும் மூன்று பெண்களும் அடங்குவர். தற்போது குறித்த நான்கு குழந்தைகளும் புத்தளம் வைத்தியசாலையைச் சேர்ந்தவர்கள்

குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் சாம்பின் ஜயவர்தனவின் மேற்பார்வையில் அவர்கள் பாதுகாப்பான சிகிச்சை பெற்று வருகின்றனர்.