புத்தளம் கல்லடி பகுதியில் மானை நாய் ஒன்று துரத்திச் சென்றதையடுத்து அப்பகுதி மக்கள் நாயிடமிருந்து மானை மீட்டு உயிருடன் பிடித்துள்ளனர்.
இதனால், மக்களால் மீட்கப்பட்ட பன்றிக்குட்டி புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் பின்னர் குறித்த மான் தப்போவா சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டதாக வனவிலங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் போது, மானின் முகத்தில் இரத்தக் காயங்கள் காணப்பட்டதாக வனவிலங்கு கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த மான் 10 மாத வயதுடைய குட்டி என வனவிலங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.