இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை!

இந்தியாவில் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களை நாடு திரும்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இந்தியாவுக்கு புகலிடக் கோரிக்கையாளர்களாகச் சென்ற இலங்கையர்களை நாடு திரும்புவதற்கு வசதியாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்க நாயக்கினால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.