யாழ்.தென்மராட்சியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருந்த 6 குண்டுகள் மீட்பு!

திங்கட்கிழமை யாழ் தென்மராட்சி – கெற்பேலிப் பகுதியில் விவசாயத்திற்காக நிலத்தை தயார்படுத்தும் போது தரையில் இருந்து சுமார் 06 கைக்குண்டுகள் (SFG 87) கண்டுபிடிக்கப்பட்டன.

இவ்விடயம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்