எரிபொருள் விலை குறித்து வெளியான முக்கிய தகவல்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு எரிபொருள் சலுகையை வழங்குவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருள் விலை சூத்திரம் அமுல்படுத்தப்பட்டால் உலக சந்தையில் நிலவும் விலைக்கு ஏற்ப ஒரு லீற்றர் எரிபொருளின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும்.

எரிபொருள் விலைச் சூத்திரத்தின்படி செயற்படுவதாக அரசாங்கம் கூறினாலும், வரிக்குப் பிந்திய எரிபொருளுக்கு தற்போது அரசாங்கம் 50 ரூபா இலாபம் ஈட்டுகின்றது.

விலைச்சூத்திரம் தொடர்பில் சட்ட ரீதியான அந்தஸ்து இல்லாத காரணத்தினால் அரசாங்கம் விரும்பியவாறு செயற்பட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.