யாழில் வாளுடன் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்கள்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவாலி பகுதியில் வாள்களுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20, 20, 21 மற்றும் 23 வயதுடைய நான்கு இளைஞர்கள் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.