மலையகத்தை உலுக்கிய இரட்டைக் கொலைச் சம்பவம்!

பதுளை மற்றும் பசறை பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை வீரியபுர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முச்சக்கரவண்டி சாரதி எனவும், கொலையுண்ட பெண்ணிடம் இருந்து 20,000 ரூபா கடனை செலுத்தாததால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெண்களை அச்சுறுத்தி கொலை செய்வதற்கு முன்னர் தங்க நகைகளை எடுத்துச் சென்ற சந்தேகநபர் அதனை அடகு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் கடந்த சனிக்கிழமை காலை இரு பெண்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டதோடு, மற்றுமொரு பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.