யாழில் காதலனால் ஆசிரியர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு!

யாழில் காதலன் ஒருவர் அவரது காதலியான ஆசிரியை ஒருவரை கண்டித்ததால் காதலி
தூக்கிட்டு தற்கொலை செய்ள்ளார்.

இச்சம்பவமானது இன்று காலை 11 மணியளவில் யாழ். கலட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 24 வயதுடைய சிவகுமாரன் நிருத்திகா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த ஆசிரியை நேற்று காதலனுக்கு தெரியாமல் தோழி ஒருவரின் திருமண வீட்டிற்கு சென்றுள்ளார்.

காதலன் பல தொலைபேசி அழைப்புகளை எடுத்த போதும் அந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அந்த பெண் திருமண வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காதலன், ஒரு வாரத்திற்கு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த காதலி, தவறான முடிவு எடுத்து இன்று உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த ஆசிரியையின் மரணம் ஆறு வருட காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.