உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

2022 க.பொ.தா உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கல்வி சாதனை அளவை உயர்த்தும் நோக்கத்துடன் மாணவர்களுக்கான தொடர் ஆதரவு கருத்தரங்குகளை நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பணிப்புரைக்கு அமைய இந்த கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அறிவியல், வணிகம், தொழில்நுட்பம், கலை என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வளங்களின் பங்களிப்புடன் இந்த கருத்தரங்குகள் நாடு முழுவதும் நடைபெற உள்ளன.