ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து நூலிழையில் உயிர் தப்பிய மாணவர்!

எல்பிட்டிய பிரதான வீதியில் எல்பிட்டிய நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் கால் பலகையில் இருந்து தவறி விழுந்த பாடசாலை மாணவர் ஒருவர் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று (14) காலை பாடசாலை ஆரம்பிக்கும் முன்னர் குறித்த பஸ் எல்பிட்டிய டிப்போவிற்கு அருகில் வேகமாக பயணித்துள்ளது.

இதற்கிடையே பஸ்சின் ஃபுட் போர்டில் பயணம் செய்த மாணவர் திடீரென தவறி கீழே விழுந்தார்.

விபத்தில் தலையில் படுகாயமடைந்த மாணவன் எல்பிட்டிய ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.