க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல் !

2022 கல்வி அமைச்சு பொதுக் கல்வியில் உயர்தர மாணவர்களின் கல்வி சாதனை அளவை உயர்த்தும் நோக்கத்துடன் மாணவர்களுக்கான தொடர் ஆதரவு கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பணிப்புரைக்கு அமைய கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளன.

விஞ்ஞானம், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் கலை போன்ற அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வளங்களின் பங்களிப்புடன் இந்த கருத்தரங்குகள் நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளன.