திருகோணமலையில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை : வெளியான காரணம்!

திருகோணமலை கண்டி வீதி பெதிஸ்புர பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொலைச் சந்தேகத்தின் பேரில் 28 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது