சற்று முன்னர் மகாராணியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி ரணில்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க மற்றும் இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேன ஆகியோர் சற்று முன்னர் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தினர்.

மகாராணியின் இறுதிக் கிரியைகள் இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும்.