மனைவி உறவுக்கு மறுத்ததால் கணவன் செய்த கொடூர செயல் : மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தனது இளம் மனைவி உறவுக்கு மறுத்ததின் காரணமா கணவர் மனைவியின் அந்தரங்க உறுப்பில் ஃபெவிக்கிக் ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள கோட்வால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென் ஹாஸ்டல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் புதியதாக திருமணம் முடித்து ரத்தோர் மற்றும் அவரது மனைவியும் வாழந்து வந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் திருமணம் முடித்ததையடுத்து மனைவி நிம்மதியான வாழ்க்கை என மகிழ்ச்சியில் இருந்ததையடுத்து கணவர் தனது சுயருபத்தை காட்ட ஆரம்பித்தார்.

இதனால் அவர் குடித்து விட்டு வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நதிலையில் சம்பவதினத்தன்று காலையில் கணவன் மனைவி வெளியில் செல்லும்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதையடுத்து இரவு வீட்டிற்கு வந்து கணவர் குடித்துவிட்டு மனைவியை வற்புறுத்தியுள்ளார்.

மனைவி தன்னுடன் வராததையடுத்து மனைவியின் ஆடைகளை பலவந்தமாக அவிழ்த்து கைகளை கட்டி மனைவியின் அந்தரங்க உறுப்பில் ஃபெவிக்கிக் ஊற்றியுள்ளார்.

இதனால் கதறிய மனைவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து கணவன் தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.