நாட்டில் மேலும் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறப்பு!

இலங்கையில் தற்போது 214 ஐ.ஓ.சி. எரிவாயு நிலையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் வழங்கத் தொடங்கி இருபது ஆண்டுகள் ஆகிறது.

இந்நிலையில், நாரஹேன்பிட்டி கொத்தலாவல ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே நிறுவனத்தின் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.