நாட்டில் அதிகரித்து வரும் HIV நோயாளிகள்!

18-25 வயதுக்குட்பட்ட எச்.ஐ.வி நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய STD மற்றும் HIV தடுப்பு திட்ட பணிப்பாளர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதத்தில் பலியான 50 பேரில் 18 பேர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர் கூறினார்.

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான சுமார் 2300 பேர் தடுப்பூசியை உட்கொள்வதாகவும், சுமார் 3700 பேருக்கு தடுப்பூசி போட வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்படாத சுமார் 1400 பேர் சமூகத்தில் வாழ்ந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.