லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

புதிய எரிவாயு சிலிண்டர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை உள்நாட்டு சந்தையில் விநியோகிக்கப்படாது என லிட்ரோ தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்கு முன்னுரிமை கொடுத்து புதிய எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறையே இதற்குக் காரணம்.

இந்நிலையில் நாடு எதிர்நோக்கி வரும் டொலர் நெருக்கடிக்கு தீர்வாக லிட்ரோ நிறுவனம் அண்மையில் இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தியது.