சூட்கேசில் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்! அதிர்ச்சி சம்பவம்

நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூட்கேசில் இருந்து ஒரு பெண்ணின் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

கிழக்கு நியூயார்க்கில் உள்ள 315 லின்வுட் தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 6வது மாடியில் துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்று மோப்ப நாய்களைக் கொண்டு தீவிரமாகத் தேடிய போலீஸார், அழுகிய நிலையில் சடலத்தின் துண்டுகளுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட சூட்கேஸ்களைக் கண்டெடுத்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடியிருப்பாளர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 20 வயது மதிக்கத்தக்க பெண் சில நாட்களாக காணாமல் போனது தெரியவந்துள்ளது.

மேலும், சில தினங்களுக்கு முன்னர் குறித்த யுவதி தனது ஆண் நண்பருடன் வீட்டில் தங்கியிருந்ததாகவும், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவலை கேள்விப்பட்ட போலீசார் அந்த ஆண் நண்பரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.