பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் : வெளியான காரணம்!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த 22ஆம் திகதி அதிகாலை பாரிஸின் புறநகர்ப் பகுதியான லக்னோரில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலில் 24 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30 வயதுடைய ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது.

பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பாரிஸ் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.