டீசல் இன்மையால் டீசல் தாங்கி ஊர்தியை கடத்திய இருவர் கைது!

கொழும்பிலிருந்து ஹந்தானை நோக்கி டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் ஒன்று இன்று அதிகாலை இரண்டு மணியளவில் ஹந்தன் சந்தியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் வந்த நான்கு பேர் வாகனத்தை மறித்து சாரதி மற்றும் நடத்துனரை தாக்கி கடத்திச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் 119 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தப்பிச் சென்ற இரு சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.