வைத்தியரின் தவறான அறுவை சிகிச்சையால் பலியான இளம்பெண்!

கொழும்பு – வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியொருவர் தவறான சத்திரசிகிச்சை காரணமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த 17 நாட்களுக்கு முன்னர் திருமணமான புத்திகா ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பித்தப்பையில் கல் அகற்றும் சத்திரசிகிச்சைக்காக வத்தளையில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் பல நாட்களாக உயிருக்கு போராடி வருகிறார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் உறவினர் ஒருவர் இந்த சம்பவம் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “இவர் எனது உறவினர் புத்திக ஹர்ஷனி தர்மவிக்ரம.

இன்று அவரது பிறந்தநாள் ஆனால் அவர் ஒரு சவப்பெட்டியில் வீட்டிற்கு வருகிறார். “டாக்டரின் தவறால் எங்கள் தேவதையை இழந்துவிட்டோம்