பிரபல தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் 16 பேர் அதிரடியாக கைது : வெளியானன காரணம்!

பதுளை – எல்ல பிரதேசத்தில் ஐந்து ஏக்கர் காட்டுப் பகுதியான றொக் பகுதிக்கு தீ வைத்தமை தொடர்பில் 16 மாணவர்கள் எல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (26) மாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை பிரதேசத்தில் உள்ள பிரபல தமிழ் பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 16 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் பதுளையில் இருந்து சகல பிரதேசங்களுக்கும் சுற்றுலா சென்றிருந்த போதே இந்த காடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.