கிளிநொச்சியில் வயோதிப தம்பதிகளை கட்டிவைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள்!

கிளிநொச்சியில் நேற்று அதிகாலை வீடொன்றிற்குள் புகுந்த கொள்ளையர்கள் 75 வயதுடைய வீட்டு உரிமையாளரைத் தாக்கி 31 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மூன்று பேர் கொண்ட இந்தக் கொள்ளைக் கும்பல் அடையாளம் காண முடியாத வகையில் முகமூடி அணிந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் வீட்டின் உரிமையாளரான 75 வயது முதியவரும் அவரது 70 வயது மனைவியும் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இவர்களது மூன்று பிள்ளைகளும் கொழும்பில் வசிப்பதாகவும் வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் எனவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் உரிமையாளரைக் கட்டிப்போட்டுவிட்டு மனைவி அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, பணம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்த அகோஷிட், வீட்டில் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்துச் சென்றனர்.