இலங்கையில் மண்வெட்டியால் தந்தையை அடித்து கொன்று தந்தையின் உடலுக்கு தீ வைத்த மகன்!

ஹோகந்தர வித்யாராஜ மாவத்தையில் மகனின் தாக்குதலில் தந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் தனது தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் தந்தையின் உடலுக்கு தீ வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ரஞ்சித் சேனாரத்ன என்ற 57 வயதான முச்சக்கரவண்டி சாரதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

போதைக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்பட்ட தனது மகனை அண்மையில் தாய் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

வாய் தகராறு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

28 வயதுடைய சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.