தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் காரணமாக கடந்த காலங்களில் நாட்டில் மது பாவனை 20% முதல் 30% வரை குறைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கலால் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
அப்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி, 2021ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 22 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.