இலங்கையில் கொள்ளையடித்து படகு மூலம் தமிழம் தப்பியோடிய கிளிநொச்சி நபருக்கு நேர்ந்த கதி!

இலங்கையில் தேடப்பட்டு வந்த இருவர், தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்திருந்த நிலையில், தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, தனுஷ்கோடி வழியாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்துள்ள இலங்கைத் தமிழர்கள் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி இந்தியக் கடலோரப் பகுதிக்கு இரு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் வந்திருப்பதாக தகவல் கிடைத்ததும், கடலோரக் காவல் படையினர் அவர்களை மீட்டு மரைன் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரகுமார் என்ற நபரே பிரபல நகைக்கடையில் புகுந்து கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, கடத்தல் மற்றும் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்தது.

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த கிருபாகரன் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபரும் கொலைக் குற்றச்சாட்டில் இலங்கையில் தேடப்பட்டு வருகிறார்.

இதையடுத்து, தேடப்படும் குற்றவாளிகள் இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் அகதிகளாக வாழ்வதாக இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.