அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்ட முச்சக்கரவண்டி சங்கங்கள்!

நாட்டில் நேற்று (01-10-2022) முதல் பெற்றோலின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்கப்போவதில்லை என முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க வழி இல்லை என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அத்துடன், வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை மேலும் 10 லீற்றரால் அதிகரிக்குமாறு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.