மட்டக்களப்பில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு – புதூர் பகுதியில் காணாமல் போன இளைஞன் ஒருவர் 5 நாட்களின் பின்னர் இன்று (02-10-2022) பிரதேச மயானத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதூர் 5ஆம் குறுக்கு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயகரன் அருஜன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதூர் மயானத்தில் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து தடயவியல் பிரிவு போலீசார் சகிதம் சென்று விசாரணை நடத்தினர். கடந்த மாதம் 27ஆம் திகதி செவ்வாய்கிழமை வீட்டில் இருந்து வெளியேறிய காணாமல் போன இளைஞன் 5 நாட்களுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீதிமன்ற அனுமதியைப் பெற்றதன் பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரதேச தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.