மட்டக்களப்பில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்க்கு இடம்பெற்ற சோகம்!

மட்டக்களப்பில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் யானை தாக்கி உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் இன்று (03-10-2022) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் மகிழடித்தீவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை சிவலிங்கம் (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 7 மணியளவில் தாந்தாமலை பகுதியில் உள்ள அடச்சல் வயலில் மீன்பிடிப்பதற்காக வீதிக்கு குறுக்கே வந்த யானை வீட்டில் இருந்து தூக்கி வீசியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.