யாழில் 14 வயது மாணவி கருக்கலைப்பு: 16,17 வயது காதலர்கள் கைது!

யாழில் 14 வயது பாடசாலை மாணவி கருக்கலைப்பு செய்ததை தொடர்ந்து 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவி கர்ப்பமானதை தொடர்ந்து பெற்றோர் ஏற்பாட்டில் மாணவிக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது.

இந்ததகவலானது யாழ் மாவட்ட பெண்கள், சிறுவர் பிரிவினருக்கு தெரியவந்ததையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சிறுமியின் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்ட பொலிசார், சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், சட்டவிரோத கருக்கலைப்பு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில் சிறுமியின் தற்போதைய மற்றும் முன்னாள் காதலர்கள் அவரை துஷ்பிரயோகம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த மையத்தில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 16 மற்றும் 17 வயதுடையவர்கள்.