நாளை நள்ளிரவு முதல் குறையும் விலைகள் லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாயில் இருந்து 300 ரூபாவாக குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிவாயு விலை சூத்திரத்தின்படி, உலக சந்தையில் நிலவும் விலை வீழ்ச்சியை கருத்தில் கொண்டு எரிவாயுவின் விலை குறைக்கப்படும்.

இதேவேளை, ஏனைய எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.