யாழில் இரு பெண்கள் செய்த மோசமன செயல் : கைது செய்த பொலிஸார்!

யாழ்ப்பாணத்தில் நேற்று இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொடிய போதைப்பொருளான ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணியந்தோட்டம் பகுதியில் 5.5 கிராம் ஹெரோயினுடன் 36 வயதுடைய பெண்ணொருவரும், கொக்குவில் பகுதியில் 2.5 கிராம் ஹெரோயினுடன் 40 வயதுடைய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.