கொத்து ரொட்டி, சோற்று பார்சல் மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை பத்து ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அகில இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக பாதுகாப்பு வரி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, விலையேற்றத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.