எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார்.
உலகளாவிய தாக்கம் காரணமாக எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள பல தீவிர பொருளாதார கொள்கைகளை அமல்படுத்த வேண்டும்.
இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நாம் பல தீவிரமான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.