கொதிநீர் பீப்பாயில் தவறுதலாக விழுந்து சிறைக்கைதி பலி!

கொதிக்கும் தண்ணீர் பீப்பாயில் விழுந்து சிறை கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கொதிக்கும் தண்ணீர் பீப்பாயில் விழுந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸ் திணைக்களம் மற்றும் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.