யாழில் நாளை வர்த்தக நிலையங்கள் பூட்டு : வெளியான காரணம்!

புகழ்பெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்பவனி நாளை நடைபெறவுள்ளதால் வர்த்தக நிறுவனங்கள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோவில் திருவிழாவை முன்னிட்டு நெல்லியடி வர்த்தக சங்க எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள் நாளை மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நெல்லியடி வர்த்தக சங்கத்தின் செயலாளர் சுரேரஞ்சன் இதனைத் தெரிவித்துள்ளார்.