கல்வி கற்பதற்காக பௌத்த பிக்குவாக இலங்கை வந்த பங்களாதேஷ் பிரஜை காவி உடை களைந்து காதலியுடன் வாழ்க்கை!

பௌத்த துறவியாக இலங்கைக்கு கல்வி கற்பதற்காக வந்த பங்களாதேஷ் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

முகநூல் ஊடாக அறிமுகமான யுவதி ஒருவரை காவி உடையை கழற்றி காதலியுடன் வாழ்ந்து வந்துள்ளபோது மஹியங்கனை பொலிஸார் கைது அவரை கைது செய்துள்ளனர்.

மானிக் பருவா என்ற 31 வயதுடைய பங்களாதேஷ் நபரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வீசா காலாவதியான பின்னரும் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.