காலிமுகத்திடல் கடற்கரையில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் பின்னர் நடந்த சோகம்!

கொழும்பு காலிமுகத்திடல் குளிக்கச் சென்ற 7 சிறுவர்களில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இன்று குளிப்பதற்குச் சென்றுள்ளனர்.

இதற்கிடையில், 15 வயது சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்..

கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு எச்சரிக்கை கொடி அகற்றப்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.