மர்மமான முறையில் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை!

நாவுல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“நாவுல சுத்தா” என அழைக்கப்படும் 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். “நவுல சுத்தா” என்று அழைக்கப்படும் இவர் போதைக்கு அடிமையானவர்களுக்கு எதிராக கடுமையாக உழைத்தவர் என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, கொலை இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் மிளகாய் தூள் வைக்கப்பட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இறந்தவரின் தாயார் அருகிலுள்ள மற்றொரு வீட்டிலும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் வேறு இடத்திலும் வசிக்கின்றனர்.

சில நாட்களாக மகனைக் காணாத தாய், அந்த நபர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது வெட்டுக்காயங்களுடன் நபர் கிடந்துள்ளார்.

அங்கு அவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டது மேலும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சந்தேகநபர்கள் தொடர்பில் பல தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.