யாழில் பெண் ஒருவரின் மோசமான செயல் : கைது செய்த பொலிஸார்!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட விசேட குற்றப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழு சந்தேக நபரை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து சுமார் 3 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.