யாழில் ரயிலில் மோதி பலியான கண் பார்வையற்ற முதியவர் : வெளியான காரணம்!

வியாபார நோக்கத்திற்காக துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

யாழில் அரியாலை ஏவி வீதியில் அமைந்துள்ள இந்த சம்பம் வித்தியயன்காடு புதிய செம்மணி வீதியில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.

தனஞ்சயன் (வயது-78) என்ற இந்த நபர் 3 பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதியவர் பார்வை இல்லாமல், காது கேட்காமல் கடக்க முயன்றபோது விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பீரேம்குமார் தலைமையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.