யாழில் நபர் ஒருவருக்கு விழுந்த அதிஷ்டத்தால் திடீரென லட்சாதிபதியாக மாறிய அந்நபர்!

யாழில் தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் கிளை முகவர் ஒருவர் மூலம் லொத்தர் சீட்டினை பெற்றுக்கொண்டதன் மூலம் நபர் ஒருவர் 35 இலட்சம் ரூபாய்க்கு சொந்தககாரர் ஆகியுள்ளார்.

கொக்குவில் பகுதியை சேர்ந்த வி.சிவராஜ் என்பவர்க்கே 35 இலட்சம் ரூபா காசோலையினை வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு நேற்று (13-10-2022) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. கனகலிங்கம் திலகவதி தலைமையில் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள லோதர் சபை முகவர் மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய லொத்தர் சபையின் தலைவர் அஜித் குணரத்ன நாரகல கலந்து கொண்டு வெற்றி பெற்ற பயனாளியான வி.சிவராஜிடம் காசோலையை வழங்கினார்.

இந்நிகழ்வில் வடக்கு கிழக்கு பிராந்திய முகாமையாளர் ஐடிபி குமாரசிறி யாழ். மாவட்ட விற்பனை ஊக்குவிப்பு உத்தியோகத்தர் எம்.தவகோகுலன், லோதர் சபையின் யாழ்.மாவட்ட கிளை முகவர்கள், வாடிக்கையாளர்கள், பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் அஜித் குணரத்ன நரகலா, தேசிய அபிவிருத்தி லோதர் சபையின் தலைவர், யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்வதுடன் காரைநகர், மாதகல், யாழ்ப்பாணம் மத்திய நகர், கோப்பாய், மருதங்கேணி ஆகிய பகுதிகளுக்குச் சென்று கடந்த மாதங்களில் லோதர் சபை முகவர்கள் ஊடாக அவர்களுக்குத் தேவையான வசதிகள் தொடர்பில் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.