யாழில் தங்கியிருந்து வேலை செய்த இளைஞர் மர்மமாக உயிரிழப்பு! : அதிர்ச்சியில் ஊர்மக்கள்!

யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீர்வேலி பகுதியில் கொத்தனார் வேலை செய்து வந்த விஜயபாகு நிதர்ஷன் என்ற 27 வயதுடைய இளைஞனே நேற்று இரவு அதிகாலை கண்விழித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

நீர்வேலி பிரதேசத்தில் வீடொன்றின் நிர்மாண வேலைக்காக தங்கி வேலை செய்து கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடும்பத்தகராறு காரணமாக உடலில் காயங்கள் ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இளைஞனின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.