வவுனியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்த இளம் யுவதி!

வவுனியா பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (18-10-2022) இரவு நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சிவா நகர் பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய துரைராஜசிங்கம் பிரமிளா என்ற யுவதி தனது வீட்டில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.