யாழில் கைதான இளைஞர் : வெளியான காரணம்!

யாழில் போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்.சிறுப்பிட்டி கலைஒளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் 99 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள்,1500 மில்லி கிராம் கஞ்சா என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.

இதன்போது கைப்பற்றப்பட்ட பொருடு்களுடன் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.